Saturday 4th of May 2024 11:26:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா: மன்னார் பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி தற்காலிகமாக பூட்டு!

கொரோனா: மன்னார் பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி தற்காலிகமாக பூட்டு!


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகள் முருங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற ஒருவர் நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நோயாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் நேற்று புதன் கிழமை (13) முதல் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் வைத்தியசாலையின் ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்ச நிலை அங்கு ஏற்பட்டுள்ளதோடு, நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகளிடம் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்வையிடல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற காரணங்களுக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE